அக்னிபத் வயது வரம்பு நீட்டிப்பு

இளைஞர்கள் ராணுவத்தில் இணையும் குறுகிய கால ராணுவ சேவை திட்டமான ‘அக்னிபத்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயுதப் படைகளில் புதிதாகப் பணியமர்த்தப்படுவோருக்கான நுழைவு வயது 17 ½ – 21 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியமர்த்தலை மேற்கொள்ள இயலாத காரணத்தால், 2022ம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணியமர்த்தல் சுழற்சிக்கு ஒருமுறை விலக்கு அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, 2022ம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தல் நடைமுறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.