போருக்கு தயாராகும் இங்கிலாந்து

மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷ்யா கூறி வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு பதற்றத்தை ​மேலும் அதிகரித்துள்ளது.