திருணமுல் காங்கிரஸ் எம்.பி-க்கு அமலாக்கத்துறை சம்மன்

மேற்குவங்க  திருணமுல் காங்கிரஸ் எம்_பி அபிஷேக் பானர்ஜிக்கு ஆசிரியர் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுபியுள்ளது. மேற்குவங்கத்தில் கடந்த 2014-2021 வரை நடந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி_பி_ஐ வழக்கு பதிந்து முதல்வர் மம்தா பானர்ஜி உறவினரான அபிஷேக் பானர்ஜியை விசாரணை நடத்தியது. தற்போது இந்த வழக்கில் பணமோசடியும் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.