அத்துமீறும் சீனா

சீனா தொடர்ந்து பல ஆண்டுகாலமாக தன்னை சுற்றியுள்ள அனைத்து அண்டை நாடுகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.அவ்வகையில், சமீபத்தில் தெற்காசிய நாடான மலேசியாவுடன் கடல் மற்றும் வான் எல்லையில் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது.சீனாவின் 16 போர் விமானங்கள் மலேசியா வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. இதுகுறித்து சீனாவிடம் கேட்டபோது, சீன விமானப்படை வழக்கம்போல பயிற்சி மேற்கொள்வதாகவும், சர்வதேச வான் எல்லைக்குள் நுழைய சீன போர் விமானங்களுக்கு அனுமதி உண்டு, சர்வதேச வான் எல்லைக்குள் நுழைய சீன போர் விமானங்களுக்கு அனுமதி உண்டு என சீன ராணுவம் தெரிவிக்கிறது.இந்த அத்துமீறல் நடைபெற்றுள்ள நிலையில் மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஹிஜாமுதீன் உசைன், மலேசியாவில் உள்ள சீன தூதரகத்துக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ‘சீன கப்பல்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மலேசிய கடல் எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைகின்றன.சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.கடல் எல்லையில் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றாமல் அவ்வப்போது சீன கடற்படை மற்றும் எண்ணெய் கப்பல்கள் ஆகியவை அத்துமீறி நடந்து கொள்வது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.