காலியாகும் காங்கிரஸ் கூடாரம்

ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன் நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியில் 45 வருடங்களாக இருந்தேன். இன்று அந்தக் கட்சி தலைமையே இல்லாமலும், எந்தப் பாதையில் செல்கிறது என்று தெரியாமலும் இருக்கிறது. காங்கிரஸ் தொலைநோக்கு பார்வை இல்லாமலும், களத்தில் இறங்கி பணி செய்ய யாரும் இல்லாத நிலையிலும் இருக்கிறது” என்று தெரிவித்தார். ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், ஹர்ஷ் மஹாஜன் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.