வளரும் பாரதப் பொருளாதாரம்

கொரோனா நோய் தொற்று நமது பாரதப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலக பொருளாதாரத்தையே ஆட்டி வைத்துள்ளது. கொரோனா சற்றித் தணிந்துள்ள இந்த சூழலில் நமது பாரதப் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது. அதற்கு ஆதாரமாக, பாரதப் பொருளாதார வளர்ச்சி வரும் காலாண்டில் 20% வரையில் வளர்ச்சி அடையும் என 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்துள்ளனர். அவர்களின் ஆய்வு முடிவுகள் ரியூட்டர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல எஸ்.பி.ஐ வங்கியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இக்காலகட்டத்தில் 18.5 சதவீதமாக வளரும் என கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி வரும் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 21.4 சதவீதமாகக் கணித்துள்ளது. இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் நிறுவனம் வரும் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இப்படி வெளியாகியுள்ள பல்வேறு பொருளாதார கணிப்புகள் அனைத்தும் நமது பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி இனிவரும் காலங்களில் உயர்வு அடையும் என்றே தெரிவிக்கிறது.