உ.பிக்களால் முதல்வருக்கு சங்கடம்

திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை தி.மு.க அரசு நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் அமைச்சர்கள், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்க வரும் அமைச்சர்களை வரவேற்க சாலையின் நடுவில் சாலையை உடைத்து குழி வெட்டி அதில் தி.மு.க கட்சியின் கொடிக் கம்பங்களை நட்டு வைத்துள்ளனர் உடன் பிறப்புகள். இது போன்று கொடிகள் நட்டு வைக்கப்பட்டதால், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எங்கே கொடிக் கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் சாலையை கடந்தனர். முன்னதாக ஸ்டாலின் சாலைகளில் கொடிக்கம்பங்களை நட்டு வைத்து வரவேற்க வேண்டாம் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் அவரின் உத்தரவை தி.மு.க உடன் பிறப்புகளே மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.