மின்கட்டண உயர்வு நியாயமல்ல

தி.மு.க கூட்டணியில் உள்ள, விடுதலை சிறுத்தைகள் அட்சித் தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”கனியாமூர் பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.தமிழகத்தில் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது.கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்றார்.தனது கூட்டணியில் உள்ள ஒரு கட்சித் தலைவரே மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள சூழ்நிலையில், தி.மு.க அரசு அது குறித்து சிந்திக்குமா?