மின்சார வாரியம் உத்தரவு

கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்த ஆய்வு கூட்டத்தில், மின் நுகர்வோரின் காப்பு வைப்புத் தொகை தற்போது கணக்கிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையை வசூலிக்கலாம். அதிகமாக இருந்தால் அதை சரிசெய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமே என்ற அச்சம் தமிழக மக்களிடம் எழுந்தது. இந்நிலையில், மின் பயன்பாட்டிற்குரிய கட்டணத்தை மட்டும் தமிழக மக்கள் செலுத்தினால் போதும். கூடுதல் காப்பு வைப்புத் தொகையை மின்சார வாரியம் வசூலிக்கக் கூடாது என மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.