சென்னையில் மின்சார பேருந்து

நாற்பது லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி, ஐதராபாத், அகமதாபாத், சூரத், கொல்கட்டா என ஒன்பது நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க, மத்திய அரசின் ‘எனர்ஜி எபிஷியன்சி’ நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், தமிழக அரசுடன் இணைந்து, சென்னையில் இந்த மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு அனுமதிக்கும் வழித்தடத்தில், எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம் மின்சார பேருந்துகளை இயக்கும். பயணச்சீட்டு கட்டணம், வருவாய் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுகளில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.