இணையவழி இசை வெளியீட்டு விழா

மகாகவி பாரதிக்குப்பின் தமிழில் அதிகமான தேசபக்திப் பாடல்களை எழுதியவரும் இந்து முன்னணி என்ற பிரம்மாண்ட அமைப்பை உருவாக்கியவருமான இராம. கோபாலனின் பாடல்களின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா வரும் 29.09.2021 புதன் கிழமை அன்று மாலை 6:30 மணி அளவில் இணையவழியில் வெளியிடப்படும். இந்நிகழ்ச்சியில், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், வெள்ளிமலையில் உள்ள விவேகானந்தா ஆசிரமத்தின் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தா, ஆர்.எஸ்.எஸ் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், மணிப்பூர் ஆளுநர் மேதகு இல. கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இசைக்கவி ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியை www.youtube.com/shreetv அல்லது www.facebook.com/shreetv என்ற இணைய இணைப்பில் காணலாம்.