இ – ஷ்ரம் அடுத்த முன்னேற்றம்

இ-ஷ்ரம் இணையதளத்தில் தற்போதுவரை சுமார் 8.43 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு தேவையான சரியான வேலை வாய்ப்புகளை அளிக்கவும் ஏதுவாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இத்தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறது. இதனால், இவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைப்பதுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணித் தேவைகளுக்கு இவர்களை எளிதில் பணியமர்த்த முடியும். பணியாளார்களுக்கு உள்ளூரிலும் வெளியூர்களிலும் பணி செய்வது எளிதாகும். இந்த தொழிலாளர்களின் தளமானது ப்ளூ காலர் மற்றும் கிரே காலர் வேலைகளுக்கான உத்தேச தொழிலாளர்கள் தளமான ‘உன்னதி’ உடன் பின்னர் இணைக்கப்படும்.