டி.ஒய்.எப்.ஐ பாலியல் குற்றவாளி

கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ஸ்ரீகாந்த் வெட்டியார், ‘வெட்டியார் ட்ரோல்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். கம்யூனிச கட்சியின் இளைஞர் பிரிவான டி.ஒய்.எப்.ஐ உறுப்பினரான இவர், தனது சமூக ஊடகத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பிரசங்கித்து வருபவர். ஆனால், நிஜத்தில்? இவர் மீது கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 8 வயது குழந்தையின் தாயான ஒரு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீகாந்த் வெட்டியார் இரண்டு முறை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் சித்திரவதை அனுபவித்து வருவதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீகாந்தின் நண்பர்கள் தொடர்புகொண்டு வழக்கை வாபஸ் வாங்க மிரட்டி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இவரது புகாரையடுத்து தைரியம் பெற்ற வேறு சில பெண்களும் ஸ்ரீகாந்த் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான ஸ்ரீகாந்த்தை காவல்துறை தேடி வருகிறது. இவர் மீது ஏற்கனவே ‘மீடூ’ புகார்கள் எழுந்த்து குறிப்பிடத்தக்கது.