பா.ஜ.க கொடிகளை அகற்றிய டி.எஸ்.பி

திண்டுக்கல்லில் காந்தி கிராமம், கிராமிய பல்கலைக் கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதையொட்டி பா.ஜ.க தொண்டர்கள் நேற்று கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகளை உற்சாகமாக அமைத்து வந்தனர். ஆனால், திண்டுக்கல் டி.எஸ்.பி, பா.ஜ.க.வினரின் கொடி கம்பங்களை அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் பா.ஜ.க தொண்டர்களை அராஜகமாக மிரட்டிய சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து அனுமதிகள் இருந்தும் ஏதோ தி.மு.க மாவட்ட செயலாள போல டி.எஸ்.பி செயல்படுகிறார் என பா.ஜ.கவினரும் பொதுமக்களும் குற்றம் சாட்டினர். இதனால் திண்டுக்கலில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.