கே.என் நேரு பாராட்டிய டி.எஸ்.பி

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் தி.மு.க.வின் மூத்த தலைவருமான கே.என். நேரு, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “இங்கே டி.எஸ்.பியாக இன்று வந்திருப்பவர் ஒரு காலத்தில், எஸ்.ஐயாக இருந்தபோது எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர். அவருக்கு, இருக்கும் திறமை என்னவென்றால், என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய ஆற்றல் பெற்றவர். ஒருவரை குற்றவாளியாக மாற்றவும் முடியும். குற்றவாளியை அதில் இருந்து காப்பாற்றவும் முடியும். இதற்கு, மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவர் எங்களோடு வளர்ந்தவர்” என குறிப்பிட்டு புகழ்ந்தார்! கே.என். நேருவால் பாராட்டப்பட்ட அந்த டி.எஸ்.பி வேறுயாருமல்ல, திருச்சி ஜீயபுரத்தில் பணியாற்றி தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள பரவாசுதேவன் தான். இவர்தான் சமீபத்தில் பெண் காவல் ஆய்வாளருடன் நிர்வாணமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பதிவேற்றி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.