போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்

‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ பற்றிய 2 நாள் கருத்தரங்கை சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து பேசுகையில், “கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றதும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றியது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை விரைவாகவும், சரியான திசையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நல்ல பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்கள், அதை உட்கொள்பவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், இந்த சமூகம், பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கிறது. போதைப் பொருட்கள் மூலம் திரட்டப்படும் பணம், தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என்று கூறினார். கருத்தரங்கம் நடைபெற்றதை முன்னிட்டு டெல்லி, சென்னை, குவாஹாத்டி ஆகிய இடங்களில் சுமார் 31,000 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.