திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமத்திற்கு உட்பட்டது அத்திமரத்து கொல்லை.இங்கு வசித்து வரும் கூலித் தொழிலாளிகளான விஜி பிரியா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை, கடந்த 26ம் தேதி இரவு நல்ல பாம்பு கடித்து விட்டது.பெற்றோர், குழந்தையை உடனடியாக அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால்,கிராமத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல முறையான சாலை வசதிகள் இல்லாததால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீண்ட நேரமானது.இதனால் குழந்தை உயிரிழந்தது.தகவலறிந்த அணைக்கட்டு காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.ஆனால், சாலை வசதி இல்லை என கூறி, குழந்தையின் சடலத்தை பாதி வழியிலேயே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டார் அதன் ஓட்டுனர். இதையடுத்து, சிறிது தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், பின்னர் கால்நடையாகவே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குகுழந்தையின் உடலை கண்ணீரோடு சுமந்துச் சென்றனர் அதன் பெற்றோர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.தமிழகத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருந்தும்; பலமலை கிராமங்களுக்கு இன்றுவரை முறையான சாலை வசதிகள், மின்சார வசதிகள் செய்துத் தரப்படவில்லை என்பது வேதனைக்குரியது.