திரௌபதி முர்மு மனு தாக்கல்

பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு நேற்று முறைப்படி மனுதாக்கல் செய்தார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, திரௌபதி முர்முவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு தாங்களும் ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோஹன் ரெட்டி தெரிவித்துள்ளார்.