பழிவாங்கும் நோக்கில் எதையும் செய்யக் கூடாது; மம்தா

யாரையும் பழிவாங்கும் நோக்கில் எதுவும் செய்யக்கூடாது என ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திராவில் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியிருப்பதாவது: சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஏதேனும் தவறு இருந்தால் கவனித்து விசாரணை செய்யுங்கள். யாரையும் பழிவாங்கும் நோக்கில் எதுவும் செய்யக்கூடாது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஜனநாயகத்துக்கு ஒரு எல்லை உண்டு. அதைத் தாண்டி எதுவும் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.