இனிதே துவங்கிய திமுகவின் நில ஆக்கிரமிப்பு

திருச்சி மாவட்டம், சோபனாபுரம் கிராம பஞ்சாயத்து அலுவலகம் எதிரே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது போக எஞ்சிய சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கருங்கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்தின், தி.மு.க பிரமுகர் சவுகத் அலி, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் சிலர் சில நாட்களுக்கு முன் வாகனங்களில் திருடிச்சென்றனர். இது குறித்து, காவல்துறையில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது காலியாக உள்ள அந்த அரசு நிலத்தை, சவுகத் அலியின் உறவினரான மதினாபீவி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளார். இதற்காகத்தான் முன்னதாக அங்கிருந்த கருங்கற்களை திருடியுள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து, உப்பிலியபுரம் பி.டி.ஓ., சந்திரசேகர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.