பிரிவினைக்கு துணைபோகும் தி.மு.க

பா.ஜ.,வின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளரான வேலூர் இப்ராகிம்,  “சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க, பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது. தி.மு.கவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை காவல்துறையைப் பயன்படுத்தி கைது செய்கிறது. முஸ்லிம்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது. மேலும் தேசத்திற்கு எதிரான செயல்கள் செய்ய சில அமைப்பின் தலைவர்கள் முயற்சிக்கும் போது,  பக்கபலமாகவும் தி.மு.க இருந்து வருகிறது. இதை விளக்கி, பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவினர் பிரசாரம் செய்வர்” என கூறியுள்ளார்.