பெருமாள் கோயில் வாசலில் தி.மு.கவினர் பிரியாணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் வாசலில், சிக்கன், மட்டன் பிரியாணியை தி.மு.கவினர் அப்பகுதி மக்களுக்கு வழங்கினர். இதற்காக, கோயில் வாசலை அடைத்து விளம்பர பேனரும் வைக்கப்பட்டது. தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், எம்.எல்.ஏ., எழிலன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். இது, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், பக்தர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. தி.மு.கவினரின் இந்த செயலுக்கு, பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட தி.மு.கவினர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.