தற்கொலைக்கு தூண்டும் தி.மு.கவினர்

வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிபவர் சீனிவாசன், இவர், தற்கொலை செய்து கொள்ள போவதாக, இவர் பேசிய ஆடியோ, தற்போது ‘வாட்ஸ் ஆப்’பில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஏலச்சீட்டு மோசடி சம்பவம் குறித்து, தி.மு.க பிரமுகர்கள் சிலர் வழக்கு பதிவு செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர். மணல் கடத்தினால், வழக்கு பதிவு செய்யக்கூடாது எனவும் தி.மு.க பிரமுகர்கள் சிலர் டார்ச்சர் செய்கின்றனர். எனக்கு மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்னால் வாழ முடியவில்லை. அதனால், தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என பேசியுள்ளார். மிரட்டிய நான்கு, தி.மு.க பிரமுகர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.