தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி

அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி, சேலம் மாநகர் தீவட்டிப்பட்டியில் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், “நல்ல நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்கு தான் தி.மு.க தலைமையிலான அரசு வந்ததே தவிர, மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. தி.மு.க என்பது கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் உள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. ஆட்சி பொறுப்பேற்று, 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க தான்” என பேசினார்.