தனியாரை அனுமதிக்கும் தி.மு.க அரசு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கான பாடப் புத்தகங்கள், பாடநுால் கழகம் சார்பில் வினியோகிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி துறையால் நேரடியாக இலவசமாக புத்தகம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு, பாடநுால் கழகம் வழியாக விற்கப்பட்டன. கடந்த 2017ல் தனியார் கடைகள் வழியாக, அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பதாக புகார் எழுந்ததைடுத்து அவர்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய தி.மு.க அரசு, மீண்டும் தனியார் வாயிலாக பாடப்புத்தகம் விற்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. சில்லரை விற்பனையாளர்கள், வரும் 5ம் தேதிக்குள் பாடநுால் கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்’ என, பாடநுால் கழக மேலாண்மை இயக்குநரகம் கூறியுள்ளது. ஏற்கனவே ஆபாசப் பேச்சாளர் லியோனியை பாடநூல் கழகத் தலைவராக நியமித்துள்ளது தி.மு.க அரசு. இந்நிலையில், இந்த அறிவிப்பின் பின்னணியிலும் தி.மு.கவினரின் மாமூலான செயல்பாடுகள் ஏதேனும் இருக்குமோ என பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.