பள்ளியில் தி.மு.கவினர் அராஜகம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சியில் உள்ள கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 59 மாணவ மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே வசிப்பவர்கள் பள்ளி வளாகத்துக்குள் குப்பையை கொட்டுகின்றனர் என்ற புகார் நீண்ட நாட்களாக உள்ளது. இது தொடர்பாக, அந்த வார்டு தி.மு.க கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமிக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே பள்ளி வளாகத்தில் காரசார விவாதம் நடந்தது. அப்போது, தலைமையாசிரியர் செந்தாமரைக்கண்ணன் குறுக்கிட்டு பேசினார். அப்போது துரைசாமி, மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியரை தாக்கி அவரது கழுத்தை பிடித்து இறுக்கி தள்ள முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.