தி.மு.க இரட்டை வேடம்

தமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், ‘நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி பரிந்துரை அடிப்படையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பிய தி.மு.க அரசு, ஏன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவில்லை? வழக்கு போட்டால் அது நிராகரிக்கப்படும் என, தி.மு.கவுக்கு நன்றாகத் தெரியும். ‘நீட்’ தேர்வு, தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், காந்தி செல்வன் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க., ஏன் எதிர்க்கவில்லை? நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரசுடன், இன்னமும் கூட்டணியில் இருந்துக்கொண்டு, தி.மு.க இரட்டை வேடம் போடுவது ஏன்? நீட் தேர்வு பா.ஜ.க அரசு கொண்டு வந்ததல்ல என தெரிந்தும் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக தி.மு.க எம்.பி.,க்கள் கோஷம் போடுவது அநாகரிகம். ஆளுனர் தங்களோடு ஒத்துப் போகவில்லை என்றால் அவரை திரும்ப பெற வேண்டும் என கூறுவதை தி.மு.கவின் வழக்கம். நீட்டை திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு, 12 மாநில முதல்வர்கள் ஒருவர் கூட பதில் எழுதவில்லை; ஆதரவும் தெரிவிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.