நிலங்களை அபகரிக்கும் தி.மு.கவினர்

நான்கரை கோடி மதிப்புள்ள 4,000 சதுர அடி நிலத்தை அபகரித்துக் கொண்டு தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் இந்த தி.மு.க அரசு, மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது. வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. திமுக நிர்வாகியிடம் இழந்த 4,000 சதுரடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு. விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த தி.மு.க அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.