நீதிமன்றத்தில் தலாக்

கர்நாடக மாநிலம் கொப்பாலை சேர்ந்தவர் சையது வாஹித். இவரது மனைவி காலிதா பேகம். இவர்களுக்கு 2017ல் திருமணம் நடைபெற்றது. அப்போது ரூ. 1 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன. ஆனால், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார் சையது வாஹித். இதனால், நீதிமன்றத்தில் காலிதா வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு காலிதா ஆஜரானார். அப்போது, அங்கு வந்த சையது வாஹித், நான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி காலிதா பேகத்திடம் மூன்று முறை ‘தலாக்’ கூறினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில், காலிதா புகார் அளித்தார். இதையடுத்து சையது வாஹித் கைது செய்யப்பட்டார்.