யதி நர்சிங்கானந்தை கொல்ல முயற்சியா?

உத்தர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னாதேவி கோயில் பூஜாரியும் ஹிந்துக்களின் விழிப்புணர்வுக்கு பாடுபடுபவருமான யதி நரசிங்கானந்தைக் கொல்ல முஸ்லிம் பயங்கரவாதிகள் பல்வேறு சமயங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் அவரைக் கொலை செய்ய வந்த ஒரு வெளிநாட்டவர் உட்பட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அந்த நால்வரை கைது செய்துள்ளது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட புலந்த்ஷார் காவல்துறையினர், அவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள், வழித்தவறி வந்தவர்களாக சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதுவரை அவர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.