வைப்புத்தொகை ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் நாம் வைக்கும் நிரந்தர வைப்புத் தொகைக்கான அவகாசம் முடியும் நிலையில் முன்பெல்லாம் அதனை வங்கிகள் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தர வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் தருவாயில் வங்கிகளுக்கு சென்று அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி புதுப்பிப்க்கத் தவறினால்,அந்த வைப்புத் தொகைக்கான வட்டி, சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.