முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பு

சென்னை கொளத்தூர் தொகுதி, தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் தொகுதி. மூன்றுமுறை அவரை வெற்றி பெறவைத்த நட்சத்திரத் தொகுதி. மூன்றுமுறை வெற்றி பெற்றும் அவர் அங்கு முறையாக பணிகள் செய்யவில்லை என்பதற்கு சில நாட்களுக்கு முன் வந்த மழை, வெள்ளமே சாட்சி. கொளத்தூர் குளத்தூர் ஆகியது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொளத்தூர் தொகுதியில் உள்ள ஔவை நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளியது தி.மு.க அரசு. அங்கு வாழ்ந்த மக்களுக்கு எந்த நிவாரணமோ, மாற்று குடியிருப்போ தரப்படவில்லை, அவசர கதியில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்னும் ஒரு வார காலத்துக்கு வீடுகள் இடிப்புத் தொடரும் என்றும் கூறப்படுகிறது. அவரை நம்பி ஓட்டுப்போட்டவர்கள், நேற்றுவரை நல்ல வீட்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று அங்கு நடுரோட்டில். இத்தனைக்கும் இடிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பாககூட ஸ்டாலின் அப்பகுதிக்கு சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கிறார். அப்போதும்கூட வீடுகள் இடிப்பை குறித்து ஒன்றும் சொல்லவில்லை.