வழக்கு விசாரணை தாமதம்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அஞ்சுமன் இன்தஜாமியா மஸ்ஜித் (ஏ.ஐ.எம்) தரப்பில் அதன் மூத்த வழக்கறிஞர் அபேநாத் யாதவின் மரணம் காரணமாக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தயாராவதற்காக 10 நாள் அவகாசம் கேட்டு ஏ.ஐஎ.ம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வாஸ், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நடைபெற்று வரும் இந்த வழக்கை தாமதப்படுத்தியதற்காக ஏ.ஐ.எம் தரப்புக்கு ரூ. 500 அபராதம் விதித்து வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.