முதல்வருக்கு கொலை மிரட்டல்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையின் சமூக ஊடகத்துக்கும் 112 என்ற உதவி எண்ணின் வாட்ஸ் அப் குழுவிலும் “சி.எம். யோகியை விரைவில் கொன்றுவிடுவோம்” என்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் செய்தியை அனுப்பியவரின் டிபியில் ‘அல்லா’ என்ற வாசகம் அடங்கிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், உ.பி பயங்கரவாத எதிர்ப்புப் படையும் (ஏ.டிஎ.ஸ்) உஷார்படுத்தப்பட்டு உள்ளது.