எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் பிரச்சனை எழுப்பப்பட்டது. இதன் பின்னணி குறித்தும் இதில் உள்ள பிஎ.ப்.ஐ, சி.எப்.ஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் சதிச் செயல்கள், குறித்தும் உடுப்பித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே ரகுபதி பட் வெளிப்படுத்தினார். இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், பல்வேறு கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன. உள்ளூர் எண்களிலிருந்தும் பல மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து மாநில உள்துறை அமைச்சரிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, உடுப்பியில் உள்ள முஸ்லீம்களும், அம்மாவட்ட காஜிகளும் இந்த விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.