இலங்கைக்கு கடனுதவி

உக்ரைன் ரஷ்ய போர், கைவிட்ட சீனா, கொரோனா பொருளாதார முடக்கம், தேயிலை விலை குறைவு, உற்பத்தி பாதிப்பு போன்ற பல காரணங்களால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது இலங்கை. அந்நாட்டு அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்துவிட்டதால் எதையும் வாங்க முடியாமல் அல்லாடுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. கடும் நெருக்கடியில் சிக்கிய பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாரதத்தின் உதவியையும் சர்வதேச நிதியத்தின் உதவியையும் இலங்கை அரசு நாடி உள்ளது. கடந்த மாதம் ரூ. 3,750 கோடி கடனுதவி வழங்கிய பாரதம் தற்போது ரூ. 7,500 கோடி கடனுதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. கடன் உதவி கேட்டு பாரதம் வந்த இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷே டெல்லியில் பிரதமர் மோடி, நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசினார்.