கோவிட் தடுப்பூசி போடும் பணிகளை, ஒருங்கிணைத்து வரும் ‘கோவின்’ இணையதளத்தில் மக்கள் தங்களின் ஆதார் எண்ணைக் கொண்டு முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இந்த தளத்தை சில மர்ம நபர்கள் முடக்கி அதில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களின் தகவல்கள் கசிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. எந்த தகவல்களும் கசியவில்லை. மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.