அக்தருக்கு நீதிமன்றம் குட்டு

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகத்தை அனுகியபோது அது சில காரணங்களால் மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் தன்னை வலுக்கட்டாயமாக அதில் இணைத்துக் கொண்டார் பிரபல பாலிவுட் பாடலாசிரியர் ஜீவேத் அக்தர். கங்கனா மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது, எனவே அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கூடாது என வாதிட்டார். அந்த வழக்கில் விசாரணையே இன்னும் துவங்கவில்லை. எனவே தடை இல்லை என கூறப்பட்ட நிலையிலும் பிடிவாதமாக பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் மேற்கொண்டார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் குழு, நாங்கள் உங்கள் தலையீட்டை அனுமதித்தால் இதேபோல 100 பேர் அல்லது 1000 பேர்கூட இப்படி வந்துகொண்டே இருப்பார்கள். தகவல் கொடுக்க நீங்கள் யார்? அது உங்களுக்கு தேவையில்லை. அதற்கு அரசு இருக்கிறது. தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, என்று கூறி அவரது தலையீட்டை நிராகரித்தனர்.