காற்றில் பறந்த கொரோனா விதிமுறை

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஹாஜி ரபாத் அலி என்பவரின் இறுதி ஊர்வலத்தில் 15,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.அதில் சில மூத்த காவல்துறை அதிகாரிகளும் அடக்கம். ராஜஸ்தானில் கொரோனா தினசரி அதிகரித்து வருகிறது அதனால், ஜூன் 8 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது எனும் சூழலில் அனைத்து கோவிட் -19 விதிமுறைகளையும் மீறி, இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற உருப்பினர் ரபீக் கான் உட்பட 11 பேர் மீது மட்டும், தொற்றுநோய் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.