மதமாற்ற பிரச்சாரம் முறியடிப்பு

திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கிறித்துவ மதம் சார்ந்த துண்டுபிரசுரங்களை வழங்கி மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி அமைப்பினர் கள்ளக்குறிச்சி – சேலம் சாலையில் வேனில் வந்த 20க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வேனில் வந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.