வெளிநாட்டினர் செய்யும் மதமாற்றம்

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மதமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது நமது நாட்டின் சட்டம். சில மாதங்களுக்கு முன்புகூட வெளிநாட்டில் இருந்து இங்கே வந்தவர் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் மதமாற்றம் செய்யும் விதமாக, ரயிலில் கைகளில் பைபிளுடன் மத பிரச்சாரம் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்பெல்லாம் நமது நாட்டில் மதமாற்றம் செய்ய வெளிநாடுகளில் இருந்து பணம் மட்டும் தான் வரும் என்ற நிலை இருந்தது. இப்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம், கிறிஸ்தவ மிஷனரிகள், மதமாற்றம் செய்ய வெள்ளையர்களையே நேரடியாக களம் இறக்கிவிட்டனவா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.