ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்று அரசு உறுதியளித்தது. ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக செவிலியர்களால வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். முதலில் அவர்கள் சேலத்தில் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை காவல்துறை கைது செய்து விடுவித்தது. இதனையடுத்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.