தொடரும் கோயில் இடிப்பு

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள நரஸிம்ம ஆஞ்சநேயர் ஆலயத்தை தி.மு.க அரசின் தூண்டுதலில் பேரில் கடந்த டிசம்பர் 18ல் இடிக்க அரசு அதிகாரிகள் வந்தனர். இதனை அப்பகுதி ஹிந்துக்களும் ஹிந்து அமைப்பினரும் போராடி தடுத்தனர். அப்போது, இடிப்பதை தள்ளிவைத்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அக்கோயிலை ஹிந்து விரோத  தி.மு.க அரசு, நேற்று காவல்துறை உதவியுடன் திடீரென இடித்துத் தள்ளியது. எப்போதும் போல இப்போதும் ஹிந்துக்கள் ஆலயம் மட்டுமே அரசு விதிகளுக்கு மாறாக கட்டியுள்ளதாகவும், அதனை இடிப்பதாகவும் காரணம் கூறுகிறது தி.மு.க அரசு. ஆனால், இதுவரை ஊரெங்கும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்றாதது தி.மு.க அரசின் ஹிந்து விரோத கொள்கையையும் சிறுபான்மையினர் மீதான ஒருதலைபட்சமான பாசத்தையும் தான் வெளிப்படுத்துகிறது.