தொடரும் சிலை உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் தொடர்ந்து நான்காவது முறையாக சாமி சிலைகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதுவரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை. தமிழக அரசும் ஹிந்து சமய அறநிலையத் துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இதனால் துணிந்துள்ள ஹிந்து விரோத சக்திகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசு இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி, சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.