பிரதமர் வாழ்த்து

உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆசீர்வதிக்கப்படட்டும். சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய ஆனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இது. அவர்களின் கடின உழைப்பே நமது பூமியை பாதுகாக்கிறது. பாரதத்தின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசு அயராது உழைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் ஒவ்வொரு குடிமகனையும் பெருமைப்படுத்துகிறது. மலிவு விலை சுகாதார திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய சேமிப்பை உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆயுஷ் நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித்துறை பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பல புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. உள்ளூர் மொழிகளில் மருத்துவப் படிப்பை செயல்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் எண்ணற்ற இளைஞர்களின் விருப்பங்களுக்குச் சிறகு தரும்’ என தெரிவித்தார்.