தலைப்பில் குழப்பிய ப்ளூம்பெர்க்

அமெரிக்காவை சேர்ந்த ப்ளூம்பெர்க் நியூஸ் கடந்த சனிக்கிழமையன்று ஒரு கட்டுரையை பதிப்பித்தது. அந்த கட்டுரையின் தலைப்பாக ‘உலகின் மிகச் சிறந்த இந்திய உணவு நியூயார்க் நகரத்தில் கிடைக்கிறது’ என இருந்தது அதனைப் படித்த இந்தியர்களை மிகவும் குழப்பியது. அதனைப் படித்த பின்புதான், அதன் ஆசிரியர், நியூயார்க் நகரத்தில் இப்போது லண்டனை விட சிறந்த இந்திய உணவு கிடைக்கிறது என்ற கருத்தை முன்வைத்தே அந்த கட்டுரையை எழுதியுள்ளார் என தெரியவந்தது. இதனால் பலர் ப்ளூம்பெர்க்கின் இந்த தலைப்பை விமர்சித்தும் அதிருப்தி தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர். ஒரு சிலர், இது ப்ளூம்பெர்க்கின் மேலாதிக்க மனப்பான்மையினை காட்டுவதாக கண்டனம் தெரிவித்தனர்.