கட்டாய மதமாற்றத் திருமணம்

திருப்பூர் மாவட்டம், சொக்கநாதபாளையத்தை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி சமீபத்தில் கல்லூரிக்கு செல்வதாகக்கூறி காணாமல் போனார். ‘உங்களது மகள் அசாருதீன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்துள்ளார்’ என்று திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. இதுதொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில், ‘எங்கள் மகளை மிரட்டியோ, மூளைச்சலவை செய்தோ கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, எங்கோ அடைத்து வைத்துள்ளனர்’ என தாராபுரம் மகளிர் காவல் நிலையம், திருப்பூர் கமிஷனர் அலுவலகத்திலும், திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தும் மனுவை வாங்க மறுக்கின்றனர். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து மகளை மீட்டுத் தர வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.