எட்டு ஆண்டுகள் நிறைவு

மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ‘மேக் இன் இந்தியா’ தொடங்கப்பட்டு, 2022, செப்டம்பர் 25ம் தேதியுடன் தனது 8 ஆண்டுகால சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது. முதலீட்டை எளிதாக்குதல், புத்தாக்க நடவடிக்கைகளை ஊக்குவித்தல், அறிவுத்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்கல்  போன்ற நோக்கங்களைக் கொண்டது ‘மேக் இன் இந்தியா’ திட்டமாகும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம், நமது நாட்டை உலகளாவிய அளவில் ஒரு முன்னணி உற்பத்தி மற்றும் முதலீட்டு இடமாக உருவாக்கி இருக்கிறது. ‘புதிய இந்தியா’வின் வளர்ச்சிப் பாதையில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நம்மோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு இது ஒரு திறந்த அழைப்பாகும். இத்திட்டம் 27 துறைகளில் அதிக அளவில் சாதனைகளை செய்துள்ளது. இதில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளும் அடங்கும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மத்திய அரசு ஒரு தாராளமயமான மற்றும் வெளிப்படையான கொள்கையை வகுத்துள்ளது. இதன் விளைவாக  பெரும்பாலான துறைகள் அந்நிய நேரடி முதலீட்டை தங்கு தடையின்றி பெறமுடியும். பாரதத்தில் 2014ம் ஆண்டில் 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள், எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து 2021ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 101 நாடுகளில் இருந்து அதிகமான அந்நிய நேரடி முதலீடு (83.6 பில்லியன் டாலர்கள்) கிடைத்துள்ளது. இவை 31 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் 57 துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்த முதலீட்டாளர்களுக்கு ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்காக ஒற்றை டிஜிட்டல் தளம், தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை  மத்திய அரசு எடுத்துள்ளது.