விவசாயிகளுக்கு இழப்பீடு

தமிழகத்தில், கடந்த 2020ல் இயற்கை பேரிடரால், விவசாயிகளுக்கு பயிர்கள் பாதிப்பு, மகசூல் இழப்பு ஏற்பட்டது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், தற்போது 66 ஆயிரத்து 540 விவசாயிகளுக்கு 35.2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. முக்கியமாக இதில் தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள, 38,962 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 20.6 கோடி ரூபாய் இழப்பீடாக கிடைத்துள்ளது.