பலாத்கார வழக்கில் கம்யூனிஸ்ட்டுகள் கைது

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முலாயஞ்சேரி கிளை செயலாளர் பாபுராஜ் என்பவர், மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு வீட்டில் யாரும் இல்லாதபோது அங்கிருந்த பெண்ணை கொன்றுவிடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தன் நண்பனான டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த லிஜீஷிடம் கூறவே அவரும் அதே போன்று நடந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவரிடம் இதனை குறித்து கூறியதை அடுத்து, வடகரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது, அந்த இரண்டு கம்யூனிச கட்சித் தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.